பேராவூரணியில் நேற்று இரவு அதிகபட்சமாக 29 மி.மீ.

Unknown
0

பேராவூரணியில் அதிகபட்சமாக 29 மில்லி மீட்டர் பதிவானது.வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை கடந்த 29-ந்தேதி தொடங்கியது. தஞ்சை மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் காலை முதல் வெயில் இன்றி காணப்பட்டது. மாலையில் மழை பெய்வதற்கான அறிகுறிகள் காணப்பட்டன. ஆனால் மழை பெய்ய வில்லை. இந்த நிலையில் நேற்று அதிகாலை தஞ்சையில் மழை பெய்தது. இதே போல் பேராவூரணி, மஞ்சளாறு, கும்பகோணம், நெய்வாசல் தென்பாதி, ஈச்சன்விடுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதே போல மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. அதன் பின்னர் மழை இன்றி காணப்பட்டது. பேராவூரணியில் அதிகபட்சமாக 29 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

மழை அளவு தஞ்சை மாவட்டத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

அதிராம்பட்டினம் 11, கும்பகோணம் 24, பாபநாசம் 19, தஞ்சாவூர் 5, திருவையாறு 23, திருக்காட்டுப்பள்ளி 1, வல்லம் 3, அய்யம்பேட்டை 25, திருவிடைமருதூர் 5.4, மஞ்சளாறு 26.6, நெய்வாசல் தென்பாதி 21, பூதலூர் 13.8, வெட்டிக்காடு 7.2, ஈச்சன்விடுதி 15.2, ஒரத்தநாடு 6.9, மதுக்கூர் 8.6, பட்டுக்கோட்டை 5, பேராவூரணி 29, அணைக்கரை 11, குருங்குளம் 2. 
Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top