நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து 11வது நாளாக போராட்டம்.

Unknown
0






ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் நடைபெற்று வரும் போராட்டம் 11வது நாளாக நீடித்துள்ளது. மாணவர்கள் மற்றும் திரையுலகினர் பங்கேற்பால் போராட்டக்களம் மேலும் வலுப்பெற்றுள்ளது. கடந்த 10 நாட்களாக வெவ்வேறு போராட்டங்களை முன்னெடுத்த நெடுவாசல் மக்கள், இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நெடுவாசலுக்கு வந்துள்ள கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும், உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். ஜல்லிக்கட்டுக்காக ஒன்றுகூடிய தாங்கள் தற்போது விவசாயிகளின் நலன்களுக்காக ஒன்று திரண்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top