புதுக்கோட்டை வெள்ளனூரில் தென்னிந்திய அளவிலான மாபெரும் தொடர் கபாடி போட்டி பிப்ரவரி 18.

Unknown
0



புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகேயுள்ள வெள்ளனூரில் அருள்மிகு அழகுநாச்சியம்மன் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு.

புதுக்கோட்டை வெள்ளனூரில் 57 வது ஆண்டு தென்னிந்திய அளவிலான கபாடி போட்டி. எதிர்வரும் 18-02-2017 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணியளவில் கோயில் திடல் முன்பாக  நடைபெறவுள்ளது. 

இந்த போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு ₹60,001 பரிசும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹40,001 பரிசும், மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு₹30,001 பரிசும், நான்காம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹20,001 பரிசுத்தொகையும் வழங்கப்படவுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கு ₹500நுழைவுகட்டணமா வசூலிக்கப்படும். 

மேலும் கால் இறுதியில் வெளியேறும் அணிகளுக்கு ₹10,001வழங்கப்படும். வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசு கோப்பைகள் தங்கம், வெள்ளி நாணயங்கள், சிறந்த அணிக்கான பரிசு, சிறந்த ஆட்ட நாயகன் பரிசு என பல்வேறு பரிசுகள் வழங்கப்படுகிறது. மேலும் விளையாட்டு வீரர்களுக்கு தங்குமிடம் பயணப்படி, உணவு வசதிகளும் செய்து கொடுக்கபடும்.நடுவர்கள் அமெச்சூர் கபடி கழக அனுமதி பெற்வர்கள்.போட்டிகள் ஏ.கே.எப்.ஐ விதிமுறைப்படி நடைபெறும்.ஆட்டம் குறித்த நேரத்தில் நடைபெறும் விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர்,செவன் ரோஸ் என்கிற பாரதி ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகிகள் மற்றும் சிங்கை நண்பர்கள் வெள்ளனூர் கிராமத்தார்கள் பொதுமக்கள் இளைஞரணி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

மேலும் தொடர்புக்கு : +91 9843073585, +91 97515 89939, +9197877 56001, +9197876 97792

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top