பேராவூரணி தென்னை பராமரிப்புக்கு மானியம் வேளாண் அதிகாரி தகவல்.

Unknown
0
தென்னை பராமரிப்புக்கு தென்னை வளர்ச்சி வாரியம் மூலம் மானியம் வழங்கப்படும் என பேராவூரணி வேளாண் அதிகாரி தெரிவித்துள்ளார்.பேராவூரணி வட்டாரத்தில் சுமார் 6290 எக்டர்பரப்பளவில் தென்னை சாகுபடி உள்ளது. தென்னையில் உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை அதிகப்படுத்தும் நோக்குடன் தென்னை வளர்ச்சி வாரியம் மூலம்பராமரிப்பு மானியம் வழங்குவதற்கு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து பேராவூரணி வேளாண்மை உதவிஇயக்குநர் ஆர்.மதியரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,தென்னையில் உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை மேம்படுத்தும் நோக்குடன், நோய் வாய்பட்ட, வயதான, மலட்டுத் தன்மையுடைய, உற்பத்தி திறனற்ற மரங்களை அகற்றிட மரம் ஒன்றிற்கு ரூ.1,000 வீதம், ஒரு ஹெக்டேர் பரப்பில் உள்ள175 மரங்களில் அதிகபட்சமாக 32 தென்னை மரங்களை வெட்டி அகற்றுவதற்கு இத்திட்டத்தின் கீழ் ரூ.32,500 மானியம் வழங்கப்படும்.

மேற்படியான பாதிப்புகள் உள்ள மரங்கள்கண்டறியப்பட்டு அவையாவும் அடையாளமிடப்பட்டு முதல் நிலை புள்ளி விபரங்கள் பகுதி வேளாண்மை உதவி அலுவலரால் தயார் செய்யப்பட்டு மேற்படி விபரங்கள் யாவும் வேளாண்மை அலுவலரால் ஆய்வு செய்யப்பட்டு பின் வட்டார வேளாண்மை உதவி இயக்குநரால் மேற்கண்ட தென்னை மரங்களை அகற்றிட ஒப்புதல் வழங்கப்படும். ஒப்புதல் வழங்கப்பட்ட 3 மாத காலத்திற்குள் அவை யாவும் அகற்றப்படல் வேண்டும்.தென்னை மரங்களை அகற்றி அந்த இடத்தில் புதிய தென்னங்கன்றுகளை நடுவதற்கு அதிகபட்சமாக ஒரு ஹெக்டேருக்கு 100 மரங்களுக்கு ரூ.4,000 வீதம் மானியமாக வழங்கப்படும்.

எனவே பேராவூரணி வட்டாரத்தில் உள்ளதென்னை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்களது தென்னந்தோப்புகளில் இதுபோன்று ஒட்டுமொத்த பரப்பில் பாதிப்புகள் ஏற்பட்டிருந்தால் உடனே தங்கள் பகுதி வேளாண்மை உதவி அலுவலர்களையோ அல்லது வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தையோ தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கேட்டு க்கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு ஆர்.மதியரசன் தெரிவித்துள்ளார்.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top