பேராவூரணி அடுத்த பள்ளத்தூர் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை.

Unknown
0


பேராவூரணி அருகேயுள்ள  உள்ள பள்ளத்தூர், ஒட்டங்காடு இணைப்பு சாலையை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பேராவூரணி அருகே பட்டுக்கோட்டை சாலையிலிருந்து பிரியும் ஒட்டங்காடு இணைப்பு சாலை பள்ளத்தூர், பூவாணம், புக்கரம்பை, கட்டையங்காடு வழியாக செல்கிறது. இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பட்டுக்கோட்டை, பேராவூரணி போன்ற பகுதிகளுக்கு செல்ல இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

இதன் வழியாக அரசு பேருந்து ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. இச்சாலை கடந்த 5 வருடங்களுக்கு மேலாக சுமார் 5 கி.மீ தூரம் மிகவும் மோசமான நிலையில் சேதமடைந்து டூவீலர் கூட செல்ல முடியாத நிலையில் உள்ளது. நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் இது நாள்வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.  மேலும் பள்ளத்தூர் அரசு மேல்நிலை பள்ளிக்கு இந்த சாலை வழியாக சைக்கிளில் செல்லக்கூடிய மாணவ, மாணவிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே இந்த சாலையை உடனே சீரமைத்து தரவேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top