பேராவூரணி ஆவணம் ரோடு சாலையில் தேங்கும் மழை நீர் வாகன ஓட்டிகள் அவதி.

Unknown
0




பேராவூரணியில் நகரின் முக்கியச் சாலைகளில் தேங்கி நிற்கும் மழை நீரால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.பேராவூரணியில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால், ஆங்காங்கே மழை நீர் தேங்குகிறது. இந்த மழை நீர் உரிய வடிகால் வசதியின்றி பிரதான சாலைகள், சாலை சந்திப்புகளில் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.இதனால், அந்த பகுதிகளில் சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறி வருகிறது.இந்த சாலையில் இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் பெண்கள், முதியோர் கடும் சிரமம் அடைகின்றனர். விபத்து அபாயமும் நிலவுகிறது. எனவே, உரிய வடிகால் வசதி ஏற்படுத்தி மழைநீரை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top