
பேராவூரணி அடுத்த கல்லூரணிக்காட்டில் பள்ளி வளர்ச்சி ஆலோசனை கூட்டம்.
December 28, 2017
0
பேராவூரணி அருகே உள்ள கல்லூரணிக்காடு அரசு தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளியின் வளர்ச்சி குறித்த ஆலோசனைக் கூட்டம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு பள்ளி வளர்ச்சி குறித்து தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் தெரிவித்தனர். வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்துவது, பள்ளிக்கு போதுமான கட்டிடங்கள் கட்ட அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வது, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஆசிரியர்கள், முக்கிய பிரமுகர்கள், கிராமத்தினர் கலந்து கொண்டனர்.

Tags
Share to other apps