பேராவூரணி அடுத் திருச்சிற்றம்பலத்தில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்.

Unknown
0
பேராவூரணி அருகே திருச்சிற்றம்பலம் சந்தைப்பேட்டை ரோட்டில் இயங்கி வந்த டாஸ்மாக் கடை பொதுமக்கள் எதிர்ப்பால் கடந்தாண்டு மூடப்பட்டது. இந்த கடையை தற்போது மீண்டும் செருவாவிடுதி ரோட்டில் பள்ளி அருகே திறப்பதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்தனர்.

தகவல் அறிந்த திருச்சிற்றம்பலம், சித்துக்காடு உள்ளிட்ட பகுதி மக்கள், டாஸ்மாக் கடை திறக்கக் கூடாதென வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். திருச்சிற்றம்பலம் காவல்துறை ஆய்வாளர் செந்தில்குமார், கலால் வட்டாட்சியர் கோபி ஆகியோர் பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் 10 நாள் வரை கடையை திறப்பதில்லை. அதற்குள் இதுகுறித்து கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து புகார் செய்யலாம் என கூறப்பட்டதை தொடர்ந்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

நன்றி :தீக்கதிர்
Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top