பேராவூரணி - பட்டுக்கோட்டை-காரைக்குடி பயணிகள் ரெயில் பயண நேரம் இன்று முதல் 3 மணி நேரமாக குறைப்பு.

Unknown
0
காரைக்குடியில் இருந்து பட்டுக்கோட்டைக்கும், பட்டுக்கோட்டையில் இருந்து காரைக்குடிக்கும் இயக்கப் படும் டெமு சிறப்பு ரெயில் நேரம் இன்று(வியாழக் கிழமை) முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி வண்டி எண் 06856 காரைக்குடியில் இருந்து காலை 9.45 மணிக்கு புறப்பட்டு 10.02 மணிக்கு கண்டனூர் புதுவயலுக்கு வந்து 10.03 மணிக்கு புறப்படுகிறது. பெரியகோட்டை ரெயில் நிலையத்துக்கு 10.14 மணிக்கு வந்து 10.15 மணிக்கும், வாளரமாணிக்கத்துக்கு 10.25 மணிக்கு வந்து 10.26 மணிக்கும், அறந்தாங்கிக்கு 11 மணிக்கு வந்து 11.02-க்கும், ஆயிங்குடிக்கு 11.15 மணிக்கு வந்து 11.16 மணிக்கும் புறப்படுகிறது. பேராவூரணிக்கு 11.48 மணிக்கு வந்து 11.50 மணிக்கும், ஒட்டங்காட்டிற்கு 12.21 மணிக்கு வந்து 12.22 மணிக்கும் புறப்படுகிறது. பட்டுக்கோட்டைக்கு மதியம் 1 மணிக்கு வந்தடைகிறது.

இதேபோல் பட்டுக்கோட்டையில் இருந்து வண்டி எண் 06855 மதியம் 1.30 மணிக்கு புறப்படுகிறது. இந்த ரெயில் ஒட்டங்காட்டிற்கு 2.10 மணிக்கு வந்து 2.11 மணிக்கும், பேராவூரணிக்கு 2.24 மணிக்கு வந்து 2.50 மணிக்கும் புறப்படுகிறது. ஆயிங்குடிக்கு மாலை 3.19 மணிக்கு வந்து 3.20 மணிக்கும், அறந்தாங்கிக்கு 3.33 மணிக்கு வந்து 3.35 மணிக்கும், வாளரமாணிக்கத்துக்கு 4.09 மணிக்கு வந்து 4.10 மணிக்கும், பெரியகோட்டைக்கு 4.20 மணிக்கு வந்து 4.21 மணிக்கும், கண்டனூர் புதுவயலுக்கு 4.32 மணிக்கு வந்து 4.33 மணிக்கும் புறப்படுகிறது. காரைக்குடிக்கு 4.50 மணிக்கு வந்தடைகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முன்பு இந்த ரெயில் காரைக்குடியில் இருந்து பட்டுக்கோட்டை வருவதற்கு 6½ மணி நேரம் ஆனது. ஆனால் தற்போது அது 3¼ மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 



Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top