பேராவூரணி நீலகண்ட பிள்ளையார்கோயிலில் தெப்ப உற்சவம் நேற்றுமுன்தினம்அதிகாலை நடந்தது.பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோயிலில் சித்ரா பவுர்ணமி திருவிழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 18ம் தேதிதேரோட்டம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவம் நேற்றுமுன்தினம் அதிகாலை நடந்தது. வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகன் சுவாமி வலம் வந்தார். பேராவூரணி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோயிலில் தெப்ப உற்சவம்
April 23, 2019
0
Tags
Share to other apps