அஞ்சல் துறை சார்பில் காந்தியடிகள் குறித்து கடிதம் எழுதும் போட்டி கரிசவயல் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

IT TEAM
0
அஞ்சல் துறை சார்பில் காந்தியடிகள் குறித்து கடிதம் எழுதும் போட்டி கரிசவயல் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

அஞ்சல்துறை சார்பாக தேசிய அளவில் நடத்தப்படும் காந்தியடிகள் பற்றிய கட்டுரைப் போட்டிக்கு கரிசவயல் அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று உதவும் கரங்கள் சார்பாக தலைமை ஆசிரியரிடம் கோரிக்கை வைத்தோம்.   அதற்கான கடித உறை மற்றும், அஞ்சல்தலை செலவுகளை நம் உதவும் கரங்கள் வழங்குவதாக அறிவித்தோம்.

அதனடிப்படையில் கடந்த நவம்பர் 25ம் தேதி போட்டி நடத்தப்பட்டது மொத்தம் 33 பேர்கள் கட்டுரை எழுதினார்கள். ஆங்கிலம் மற்றும் தமிழ் என இரு பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டு தேசிய அளவில் நடக்கும் போட்டிக்கு அனுப்பப்பட்டது.

போட்டியில் கலந்துகொண்ட 33 பேரில் அவர்களின் ஆர்வத்தை ஊக்குவிக்கும் படி நன்றாக கட்டுரை எழுதியவர்களில் உயர்நிலைப் படிப்பவர்களில் 3 பேரும், மேல்நிலைப் படிப்பில் 3 பேரும், ஆங்கிலத்தில் எழுதிய ஒருவருக்கும் நம் உதவும் கரங்கள் சார்பாக ஜனவரியில் நடைபெறவிருக்கும் இலக்கிய விழாவில் வைத்து பரிசு வழங்கப்படும்.



நன்றி: கரிசவயல் உதவும் கரங்கள், Ibrahim Ibu

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top