பேராவூரணி COOL GUYS இளைஞர் மன்றம் சார்பில் நாளை மாலை 4 மணிக்கு கண்டன ஆர்பாட்டம்..

Unknown
0

பேராவூரணி COOL GUYS இளைஞர் நற்பணி மன்றத்தை நடத்தபடும் கண்டன ஆர்பாட்டம் .
நாளை மாலை 4 மணிக்கு  பேராவூரணி சேதுரோட்டில் கண்டன ஆர்பாட்டம் நடைபெறவுள்ளது.

இந்த ஆர்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கலந்துகொள்வர்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

  1.  காவிரி பிரச்சனை தொடர்பாக கன்னட வெறியர்களை கண்டித்தும்.
  2. நாட்டின் முதன்மை நீதிமன்றமான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதித்து அப்பாவி தமிழர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய கன்னடர்களை கண்டித்தும்.
  3. தமிழக வாகனங்களை தீக்கு இரையாக்கிய கன்னட வெறியர்களைக் கண்டித்து.
  4. உச்சநீதிமன்ற தீர்ப்பை துச்சமாக எண்ணி கலவரத்தை தூண்டிவிட்ட கர்நாடக அரசைக் கண்டித்தும்.
  5. இரு மாநிலங்களின் பிரச்சனையை மெளனமாக் இருந்து வேடிக்கைப் பார்க்கும் மத்திய அரசைக் கண்டித்தும்.
  6. விவசாயிகளின் நலனை கருத்தில் கொள்ளாமல் தமிழகத்திற்கு தண்ணீர் தராமல் தமிழ்நாட்டை தரிசு பூமியாக்கும் நோக்கத்தோடு செயல்படும் அரசை கண்டித்தும்.
  7. உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதித்த கன்னட வெறியர்கள் மீது கர்நாடக மாநில அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், உச்சநீதிமன்ற தீர்ப்பை முழுவதுமாக செயல்படுத்த கோரியும்.
  8. விவசாயிகளின் நலன் கருதி இப்பிரச்சனையில் தமிழக அரசு தலையிட்டு இப்பிரச்சனையை சரிசெய்து அப்பாவி தமிழர்களை காப்பாற்றக்கோரியும்.
இந்த ஆர்பாட்டம்   நாளை (17.09.2016) பேராவூரணி சேதுரோட்டில் மாலை 4 மணிக்கு கண்டன ஆர்பாட்டம் நடைபெறவுள்ளது. இதில் பொதுமக்கள், இளைஞர்கள் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top