வரலாற்றில் இன்று மே 29.

Unknown
0
1453 – ஓட்டோமான் படைகள் கான்ஸ்டான்டினோபில் நகரைக் கைப்பற்றி பைசண்டைன் பேரரசை முடிவுக்குக் கொண்டுவந்தனர்.
1660 – இரண்டாம் சார்ல்ஸ் பிரித்தானியாவின் மன்னனாக மீண்டும் முடி சூடினான்.
1677 – வேர்ஜீனியாவில் குடியேறிகளுக்கும் உள்ளூர் பழங்குடிகளுக்கும் இடையில் அமைதி உடன்பாடு ஏற்பட்டது.
1727 – இரண்டாம் பீட்டர் ரஷ்யாவின் மன்னனாக முடி சூடினான்.
1780 – அமெரிக்கப் புரட்சிப் போர்: சரணடைந்த அமெரிக்கப் போர்வீரர்கள் 113 பேரை “பனஸ்ட்ரே டார்லெட்டன்” தலைமையிலான படைகள் கொன்றனர்.
1790 – ரோட் தீவு ஐக்கிய அமெரிக்காவின் 13வது மாநிலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
1848 – விஸ்கொன்சின் ஐக்கிய அமெரிக்காவின் 30வது மாநிலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
1864 – மெக்சிக்கோவின் முதலாம் மாக்சிமிலியன் முதற்தடவையாக மெக்சிக்கோ வந்து சேர்ந்தான்.
1867 – ஆஸ்திரிய-ஹங்கேரிப் பேரரசு அமைக்கப்பட்டது.
1869 – பிரித்தானியாவில் பகிரங்க மரணதண்டனை தடை செய்யப்பட்டது.
1886 – வேதியியலாளர் ஜோன் பெம்பர்ட்டன் முதற் தடவையாக கொக்கக் கோலாவுக்கான விளம்பரத்தை அட்லாண்டா ஜேர்னல் இதழில் வெளியிட்டார்.
1903 – சேர்பியாவின் மன்னன் அலெக்சாண்டர் ஒப்ரெனோவிச் மற்றும் அராசி திராகா இருவரும் படுகொலை செய்யப்பட்டனர்.
1914 – புனித லோரன்ஸ் வளைகுடாவில் எம்ப்ரெஸ் ஒஃப் அயர்லாந்து என்ற அயர்லாந்து பயணிகள் ஆடம்பரக் கப்பல் மூழ்கியதில் 1,024 பேர் கொல்லப்பட்டனர்.
1919 – ஐன்ஸ்டீனின் சார்புக் கோட்பாடு சோதிக்கப்பட்டது. பின்னர் இது உறுதிப்படுத்தப்பட்டது.
1947 – இந்தியத் தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் அமைக்கப்பட்டது.
1953 – முதற்தடவையாக சேர் எட்மண்ட் ஹில்லறி, ஷேர்ப்பா டென்சிங் இருவரும் எவரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை படைத்தனர்.
1972 – டெல் அவிவ் விமான நிலையத்தில் மூன்று ஜப்பானியர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
1982 – இலங்கை மட்டக்களப்பில் சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.
1985 – பெல்ஜியத்தில் ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டி ஒன்றில் இடம்பெற்ற கைகலப்பில் மைதானத்தீன் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்ததில் 39 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
1988 – அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரேகன் முதற்தடவையாக சோவியத் ஒன்றியத்துக்கு விஜயம் செய்தார்.
1990 – போரிஸ் யெல்ட்சின் ரஷ்யக் குடியரசின் அதிபரானார்.
1999 – டிஸ்கவரி விண்ணோடம் பன்னாட்டு விண்வெளி நிலையத்துடனான தனது முதலாவது இணைப்பை வெற்றிகரமாக முடித்தது.
1999 – 16 ஆண்டுகள் இராணுவ ஆட்சியின் பின்னர் நைஜீரியாவில் அதிபரை மக்கள் தெரிவு செய்தனர்.
2005 – ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளைத் தீவிரவாத அமைப்பாக அறிவித்துத் தடை செய்தது.

பிறப்புகள்

   1872 – சிவயோக சுவாமி, ஈழத்துச் சித்தர் (இ. 1964)
1890 – மார்ட்டின் விக்கிரமசிங்க, சிங்கள எழுத்தாளர் (இ. 1976)
1917 – ஜோன் எஃப். கென்னடி, ஐக்கிய அமெரிக்காவின் 35வது குடியரசுத் தலைவர் (இ. 1963)
1942 – மாதுலுவாவே சோபித்த தேரர், இலங்கைப் பௌத்த பிக்கு, மனித உரிமை செயற்பாட்டளர் (இ. 2015)
1984 – கார்மெலோ ஆந்தனி, அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்
1926 – அப்துலாயே வாடே, செனிகல் நாட்டின் 3வது அரசுத்தலை8வர்
1929 – பீட்டர் ஹிக்ஸ், ஆங்கிலேய-ஸ்கொட்டிய இயற்பியலாளர்

இறப்புகள்

1829 – ஹம்பிரி டேவி, ஆங்கிலேய இயற்பியலாளர் (பி. 1778)
1892 – பகாவுல்லா, பாரசீக ஆன்மிகத் தலைவர், பகாய் சமயத்தைத் தோற்றுவித்தவர் (பி. 1817)
1911 – டபிள்யூ. எஸ். கில்பர்ட், ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1836)
1958 – வான் ரமோன் ஹிமெனெஸ், நோபல் பரிசு பெற்ற எசுப்பானியக் கவிஞர் (பி. 1881)
1979 – மெரி பிக்ஃபோர்ட், கனடிய-அமெரிக்க நடிகை (பி. 1892)
1987 – சரண் சிங், இந்தியக் குடியரசின் 7வது பிரதமர் (பி. 1902)
2005 – ஹாமில்டன் நாகி, தென்னாப்பிரிக்க மருத்துவ உதவியாளர் (பி. 1926)
   2009 – சோ. கிருஷ்ணராஜா, இலங்கை வரலாற்றாளர், மெய்யியல் பேராசிரியர் (பி. 1947)

சிறப்பு நாள்

நைஜீரியா – மக்களாட்சி நாள் (1999)
ஐக்கிய நாடுகளின் அமைதி காப்போருக்கான சர்வதேச நாள்

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top