நெடுவாசலில் 44வது நாள் ஜெம் நிறுவனத்தை அடித்து விரட்டும் போராட்டம்.

Unknown
0

நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கு மத்திய அரசுடன் ஒப்பந்தம் போட்ட ஜெம்லேபரட்டரீஸ் நிறுவனத் தின் உருவ பொம்மையை அடித்து விரட்டும் நூதனப்போராட்டத்தில் வியாழக்கிழமையன்று விவசாயிகள் ஈடுபட்டனர்.மக்கள் விரும்பாத திட்டத்தை செயல்படுத்தமாட் டோம் என்று வாய் மொழியாக சொல்லிக் கொண்டே பாஜக பிரமுகரின் ஜெம் நிறுவனத்துடன் மத்திய அரசுஹைட்ரோகார்பன் திட்டத் திற்கு ஒப்பந்தம் போட்டது. இதனால் கோபமடைந்த விவசாயிகள் இரண்டாம் கட்டமாக கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி தொடங்கி பல்வேறு நூதனப் போராட் டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.விவசாயிகளின் போராட்டத்திற்கு ஒவ்வொரு நாளும் பல்வேறு அமைப் பினரும் அரசியல் பிரமுகர்களும், திரைத் துறையினரும் நேரில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் 44-ஆவது நாளாக வியாழக்கிழமையன்று நடைபெற்ற கவன ஈர்ப்பு நூதனப்போராட்டத்தில் ஜெம் நிறுவனத்தின் உருவ பொம் மைக்கு தலையில் மண்சட்டியைக் கவிழ்த்து போராட் டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஹைட்ரோ கார்பனை தடை செய்யக்கோரி,காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கமிட்டனர். மேலும், ஜெம் நிறுவன உருவ பொம்மையை அடித்துநொறுக்கியும் போராட் டத்தில் ஈடுபட்டனர்.ஹைட்ரோகார்பன் திட்டம் என்கிற பெயரில் எங்கள் நிலத்தை துளைப்பதற்கு யார் வந்தாலும் ஊருக்குள் நுழைய விடமாட்டோம். எங்கள் மண்ணைக் காக்கும் போராட்டத்தில் எங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் அவர்களை அடித்து விரட்டுவோம் என்றனர். போராட் டத்தில் விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் என ஏராளமானோர் பங் கேற்றனர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top