பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆன் - லைன் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு ஸ்மார்ட் குடும்ப அட்டை வழங்கும் நிகழ்ச்சி.

Unknown
0
பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆன் - லைன் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு ஸ்மார்ட் குடும்ப அட்டை வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கங்காதரன் தலைமை வகித்து, பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கிப் பேசுகையில், " இதுவரை புதிய மின்னணு குடும்ப அட்டை பெறாதவர்கள் தங்களுடைய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், மொபைல் எண்ணுடன் வட்ட வழங்கல் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். கள ஆய்வு செய்து உடனடியாகப் புதிய குடும்ப அட்டை வழங்கப்படும். தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 6 லட்சம் குடும்ப அட்டைகளில், இதுவரை 3 லட்சத்து 26 ஆயிரம் ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.
நன்றி : தீக்கதிர் 
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top