காரைக்குடி- திருவாரூர் அகல ரயில் பாதை பணிகளை விரைந்து முடித்திட கோரிக்கை.

Unknown
0


பேராவூரணியில் ரயில் பயனாளிகள் சங்க அமைப்பு கூட்டம் நகர வர்த்தக சங்க கட்டிடத்தில் பேரூராட்சி முன்னாள் பெருந்தலைவர் என்.அசோக்குமார் தலைமையில் நடை பெற்றது. கூட்டத்தில் அமைப்பின் தலை வராக ப.சத்தியமூர்த்தி, செயலா ளராக ஏ.சோமசுந்தரம், பொருளாளராக குமார் என்ற பழனிவேல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். காரைக்குடி- திருவாரூர் அகல ரயில் பாதை பணிகள் தொடங்கி 4 ஆண்டுகள் ஆகியும், பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகின்றன. எனவே பணிகளை விரைந்து முடித்து ரயில் சேவையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். நீலகண்டபுரம் 2-வது தெரு ரயில்வே கேட் எண் 121-ஐ நிரந்தரமாக மூடும் திட்டத்தை கைவிட வேண்டும். தொடர்ந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டியும், செங்கொல்லை ரயில்வே கிழக்கு தெரு சாலையை பொதுமக்கள் தேவையை கருத்திற்கொண்டு நிரந்தர தார்ச்சாலையாக அமைத்துத்தர வேண்டும் என்று வலியுறுத்தி ரயில்வே அலுவலர்களை சந்தித்து கோரிக்கை விடுப்பது என தீர்மானிக்கப்பட்டது.
நன்றிபேராவூரணியில் ரயில் பயனாளிகள் சங்க அமைப்பு கூட்டம் நகர வர்த்தக சங்க கட்டிடத்தில் பேரூராட்சி முன்னாள் பெருந்தலைவர் என்.அசோக்குமார் தலைமையில் நடை பெற்றது. கூட்டத்தில் அமைப்பின் தலை வராக ப.சத்தியமூர்த்தி, செயலா ளராக ஏ.சோமசுந்தரம், பொருளாளராக குமார் என்ற பழனிவேல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். காரைக்குடி- திருவாரூர் அகல ரயில் பாதை பணிகள் தொடங்கி 4 ஆண்டுகள் ஆகியும், பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகின்றன. எனவே பணிகளை விரைந்து முடித்து ரயில் சேவையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். நீலகண்டபுரம் 2-வது தெரு ரயில்வே கேட் எண் 121-ஐ நிரந்தரமாக மூடும் திட்டத்தை கைவிட வேண்டும். தொடர்ந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டியும், செங்கொல்லை ரயில்வே கிழக்கு தெரு சாலையை பொதுமக்கள் தேவையை கருத்திற்கொண்டு நிரந்தர தார்ச்சாலையாக அமைத்துத்தர வேண்டும் என்று வலியுறுத்தி ரயில்வே அலுவலர்களை சந்தித்து கோரிக்கை விடுப்பது என தீர்மானிக்கப்பட்டது.
 நன்றி  : தீக்கதிர் 
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top