கராத்தே போட்டி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு.

Unknown
0


தென்னிந்திய அளவிலான தற்காப்பு கலையான கராத்தே போட்டிகள் கடலூரில் அண்மையில் நடைபெற்றது.இப்போட்டியில் கட்டா பிரிவில் பேராவூரணி பகுதியை சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். போட்டியில் இரண்டாமிடம் பெற்ற மாணவர்கள் எஸ்.அகிலன், கே.பிரகதீஸ்வரன், அமிர்தத் மணிசங்கர், எம்.சந்தியா, கே.பிரவீன், மூன்றாம் இடம் பெற்ற மாணவர்கள் ஜி.ஆனந்த சித்தன், சி.அருண்குமார், என்.யுவன் ராஜ், எஸ்.மணிகண்டன், பி.மணிமேகலை, எஸ்.சாலினி ஆகியோருக்கு தாய் புடோகான் பயிற்சி பள்ளியில், ஒருங்கிணைப்பாளர் கரிகாலன் முன்னிலையில் பாராட்டு விழா நடைபெற்றது. தலைமை பயிற்சியாளர் சென்சாய் கே.பாண்டியன் வரவேற்றார். கொன்றைக்காடு அரசு உயர்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் லயன்ஸ் எஸ்.கே.இராமமூர்த்தி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். பெற்றோர்கள், கிராமத்தினர், பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.
Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top