பேராவூரணி பகுதியில் திருமண மண்டபங்களுக்கு உரிமம் பெற வேண்டும் தாசில்தார் அறிவிப்பு.

Unknown
0


பேராவூரணி பகுதியில் இயங்கி வரும் திருமண மண்டபங்கள், விழா அரங்கங்கள் இயங்குவதற்கு உரிமம் பெற அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

பேராவூரணி தாசில்தார் ரகுராமன் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பு: பேராவூரணி வட்டாரத்தில் இயங்கி வரும் திருமண மண்டபங்கள், விழா அரங்கங்களின் உரிமையாளர்கள், தமிழ்நாடு கட்டிடங்கள் உரிமைச் சட்டம் 1965ன் படி கீழ் காணும் சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும். உரிமம் பெறுவதற்கு உரிம கட்டணமாக ரூ.5 ஆயிரத்தை வங்கியில் செலுத்தி ரசீதை விண்ணப் பத்துடன் இணைத்து அரசு அங்கீகாரம் பெற்ற பொறியாளர்களிடம் கட்டிட உறுதிச்சான்று, அங்கீகரிக்கப் பட்டகட்டிட வரை படம் தீயணைப்புதுறையிடமிருந்து பெறப்பட்ட மறுப் பின்மை சான்றிதழ், பொதுசுகாதாரத்துறையிடமிருந்து சுற்றுப்புறதூய்மைக்கான சான்று ஆகியவற்றையும், கிராம நிர்வாக அலுவலரிடம் பெறப்பட்ட சிட்டா அடங்கல் ஆகியவற்றையும் சமர்ப் பிக்க வேண்டும். 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை உரிமத்தை புதுப்பித்து கொள்ள வேண்டும். மேலும் விழா காலங்களில் வெடிகள் வெடிக்க அனுமதி கிடையாது. மண்டபங்களில் பார்க்கிங் வசதி கண்டிப்பாக செய்யவேண்டும். போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை வழியில் நிறுத்தக்கூடாது. கீற்று கொட்டகை மண்டபங் கள் இருக்கக் கூடாது. ஒலி பெருக்கிகளில் அனுமதி பெற்ற நேரத்தில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top