பேராவூரணி அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் தேர்வுக்குத் தயாராவோம் சிறப்புச் சொற்பொழிவு.

Unknown
0


பேராவூரணி அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் பொதுத் தேர்வு எழுத தயாராக இருக்கும் 10, 11, 12 வகுப்பு மாணவர்களுக்கு பயன் தரும் வகையில்
"தேர்வுக்குத் தயாராவோம்" என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் சி.கஜானாதேவி தலைமையில் புதுக்கோட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி ஓய்வுபெற்ற ஆசிரியர் செல்வி விஜயலெக்சுமி சிறப்புரையாற்றினார். மெய்ச்சுடர் நா. வெங்கடேசன் உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர். "இந்நிகழ்வு எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. கையெழுத்து அழகாக இல்லை என்று இதுநாள் வரை எனக்குத் தாழ்வு மனப்பான்மை இருந்த்து. இந்நிகழ்வுக்குப் பின் எனக்கு நம்பிக்கை பிறந்துள்ளது." என்று மாணவர்கள் நெகிழ்சியோடு தெரிவித்தனர்.



நன்றி:மெய்ச்சுடர்

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top