பேராவூரணி அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவ,மாணவியர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஏப்.22-ம் தேதி முதல் வழங்கப்படுகிறது.

IT TEAM
0

பேராவூரணி அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவ,மாணவியர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஏப்.22-ம் தேதி முதல் வழங்கப்படுகிறது. இளங்கலை தமிழ் (பி.ஏ.தமிழ்), ஆங்கிலம், வணிகவியல் (பி.காம்), கணிதம் (பி.எஸ்சி), கணினி அறிவியல், இளநிலை வணிகநிர்வாகம் (பிபிஏ) உள்ளிட்ட 6 பாடப் பிரிவுகளுக்கு இருபால் மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.விண்ணப்பம் ஏப்.22 ஆம் தேதி முதல் வழங்கப்படுகிறது. விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி மே 9 ஆகும். முதல்கட்ட கலந்தாய்வு ஜூன் 3 ஆம் தேதி நடைபெறவுள்ளது. மாணவர் சேர்க்கை கலந்தாய்வு அரசு விதிமுறைகளின் படி நடைபெறும். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ 48, பதிவுக்கட்டணம் ரூ.2 ஆக ரூ.50 செலுத்த வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், சாதிச்சான்று நகலை கொடுத்தால் பதிவுக்கட்டணம் ரூ.2 மட்டும்செலுத்தினால் போதுமானது என கல்லூரிமுதல்வர் (பொ) சி.இராணி தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top