பேராவூரணி தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் தொடக்கம்...

Unknown
0


பேராவூரணியை அடுத்த திருச்சிற்றம்பலத்தில் தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு தஞ்சாவூர் வேளாண் இயக்குநர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். தஞ்சை வேளாண் வணிக துணை இயக்குநர் உதயகுமார் முன்னிலை வகித்தார். நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் சுப்பிரமணியன் குத்துவிளக்கேற்றினார். விழாவில் தஞ்சை ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சொக்கலிங்கம், வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலைய தலைவர் ராஜேந்திரன், இந்திய பாரம்பரிய அறிவியல் மைய திட்ட இயக்குநர் சுபாஷினிஸ்ரீதர், தஞ்சாவூர் காவிரி டெல்டா உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை சேர்ந்த கோவிந்தராஜன் உள்ளிட்டோர் பேசினர்.
விழாவில் தோட்டக்கலை சாகுபடி திட்டங்கள் பற்றி தோட்டக்கலைதுறை துணை இயக்குநர் சந்திரஹாசன் வேளாண்மையில் இயந்திர சாகுபடி பற்றி மோகனகிருஷ்ணன் ஆகியோர் விளக்கினர்.
Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top