தமிழகத்தில் பள்ளிகளுக்கு 21-ம் தேதி முதல் கோடை விடுமுறை.

Unknown
0

தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படும். முதலில் ஏப்ரல் 30-ஆம் தேதிக்கு பிறகுதான் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடுவதாக திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் மாநிலம் முழுவதும் பல மாவட்டங்களில் வெப்ப நிலை அதிகரித்து காணப்படுவதாலும், அனல் காற்று வீசுவதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஆரம்ப பள்ளிகளுக்கு வரும் 25 முதல் 29-ஆம் தேதிவரை தேர்வுகள் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்பொழுது தேதிகள் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும்.
இவ்வாறு செங்கோட்டையன் தன்னுடைய பேட்டியில் தெரிவித்தார்.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top