சி.பி.எஸ்.இ. 12–ம் வகுப்பு தேர்வு முடிவு நாளை காலை வெளியாகிறது.

Unknown
0 minute read
0

சி.பி.எஸ்.இ. 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. கடினமான கேள்விகளுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கும் திட்டத்தை கைவிடுவதாக சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட 32 கல்வி வாரியங்கள் கடந்த மாதம் அறிவித்தன.

இதை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்கில் சி.பி.எஸ்.இ.யின் உத்தரவை ரத்து செய்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என சி.பி.எஸ்.இ. இயக்குநரகம் தெரிவித்துள்ளதால் கடினமான கேள்விகளுக்கு கருணை மதிப்பெண்கள் அளிக்கப்படும். தேர்வு முடிவுகளை www.results.nic.in, www.cbseresults.nic.in, www.cbse.nic.in ஆகிய இணையத்தளங்களில் வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
Tags

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top