சேதுபாவாசத்திரம் காவல் ஆய்வாளர் அன்பழகன் பட்டுக்கோட்டை நகர காவல் ஆய்வாளராக நியமனம்.

Unknown
0

சேதுபாவாசத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் அன்பழகன் பட்டுக்கோட்டைக்கும், பட்டுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளராக நியமனம்.

தஞ்சாவூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் 10 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சேதுபாவாசத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் அன்பழகன் பட்டுக்கோட்டைக்கும், பட்டுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் சிங்காரவேலு நாகை மாவட்டம், சீர்காழிக்கும், சீர்காழி காவல் ஆய்வாளர் அழகுதுரை திருவாரூர் மாவட்டம் நன்னிலத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

நன்னிலம் காவல் ஆய்வாளர் மணிமாறன் நாகை மாவட்டம் திருவெண்காடுக்கும், திருவெண்காடு காவல் ஆய்வாளர் ஆனந்ததாண்டவம் சென்பனார்கோவிலுக்கும், திருவாரூர் மாவட்டம், குடவாசல் காவல் ஆய்வாளர் செல்வம் நாகை மாவட்டம் ஏ.கே.சத்திரத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஏ.கே.சத்திரம் காவல் ஆய்வாளர் சிவபிரகாசம் திருவாரூர் மாவட்டம்,
குடவாசலுக்கும், மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் மகாதேவன் கும்பகோணம் கிழக்குக் காவல் நிலையத்துக்கும்,
கும்பகோணம் கிழக்கு ஆய்வாளர் பெரியசாமி தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்துக்கும், மருத்துவக் கல்லூரி காவல் நிலைய ஆய்வாளர் ஆரோக்கியதாஸ் தஞ்சாவூர் கிழக்குக் காவல் நிலையத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நன்றி : தினமணி

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top