பேராவூரணி: ஏரி, குளங்களில் மண் அள்ளுவது குறித்து முகாம்.

Unknown
0

பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஏரி, குளங்களில் விவசாயத்திற்காகவும் மண்பாண்டங்கள் செய்வதற்கும் சொந்த தேவைகளுக்காக விவசாயிகள், மண்பாண்டத் தொழிலாளர்கள், பொதுமக்கள் வண்டல் மண், சவுடு மண், களி மண் ஆகியவற்றை எடுத்துச் செல்வதற்கான விண்ணப்பம் அளிப்பது தொடர்பான சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றது.சிறப்பு முகாமில் பேராவூரணி வட்டாட்சியர் எஸ்.கே.ரகுராமனிடம் பொதுமக்கள் மனு அளித்தனர். விவசாயிகள் மற்றும் மண்பாண்டத் தொழிலாளர்கள் தங்கள் விண்ணப்பங்களில், சம்பந்தப்பட்ட பகுதி கிராம நிர்வாக அலுவலர்களிடம் உரிய சான்று பெற்று தாக்கல் செய்யவேண்டும் என வட்டாட்சியர் தெரிவித்தார். பேராவூரணி பகுதியில் உள்ள காட்டாறுகளில் அனுமதியின்றி மணல் அள்ளக்கூடாது. மணலை பதுக்கி வைத்து விற்பனை செய்யக்கூடாது. மாட்டு வண்டிகளில் அனுமதியின்றி மணல் அள்ளுவோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்படும் என வட்டாட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நன்றி : தீக்கதிர்
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top