பேராவூரணியை அடுத்த உடையநாட்டில் நடந்த கைப்பந்து போட்டியில் சென்னை அணி வெற்றி.

Unknown
0

பேராவூரணியை அடுத்த உடையநாட்டில் சுழற்கோப்பைக்கான கைப்பந்து போட்டி நடந்தது.  மின்னொளி திடலில் நடந்த இந்த கைப்பந்து போட்டிக்கு முதல் பரிசு ரூபாய் 20,000, இரண்டாம் பரிசு 15,000 , மூன்றாம் பரிசு 10,000, நான்காம் பரிசு 5,000 மற்றும் சிறப்பு பரிசுகள் பல அறிவிக்கப்பட்டிருந்தன.

உடையநாடு ஸ்போர்ஸ் கிளப் நடத்திய இப்போட்டியை பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு துவங்கி வைத்தார். இதில் திருச்சி, இடைமேலையூர், கீழக்கரை, திட்டச்சேரி, கீரமங்கலம், பொன்காடு, கடலூர் ஆகிய அணிகள் கலந்து கொண்டு விளையாடின. முதல் பரிசை .திருச்சி அணியினரும்., இரண்டாம் பரிசை கீரமங்கலமஅணியினரும், மூன்றாம் பரிசை இடைமேலையூர் அணியினரும், நான்காம் பரிசை பொன்காடு அணியினரும் பெற்றனர். பரிசுகளை பண்ணவயல் நீதியரசர் ஆர். ராஜதம்பி வழங்கினார். விழவில் தமிழ்நாடு மீனவர் பேரவை மாநிலச் செயலாளர் ஏ.தாஜுதீன், யாசர்அரபாத், குலாம்கனி, அப்துல்ரசாக், அப்துல்சபார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top