பேராவூரணி கடைவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடக்கம்.

Unknown
0
பேராவூரணி கடைவீதி மற்றும் முக்கிய இடங்களில் நெடுஞ்சாலை துறைக்குச் சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகப் பல்வேறு தரப்பில் இருந்தும் மாவட்ட ஆட்சியருக்குப் புகார் மனுக்கள் அனுப்பப்பட்டன.
இதையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி, செவ்வாய்க்கிழமை பேராவூரணி வட்டாட்சியர் ரகுராமன் தலைமையில் கடைவீதியில் ஆக்கிரமிப்பு களை அகற்றும் பணி தொடங்கியது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் நெடுஞ்சா லைத் துறை, பொதுப்பணித் துறை, பேரூராட்சி துறை, காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மேலும் 2 தினங்கள் நடைபெறும் எனத் தெரிகிறது.
ஆக்கிரமிப்பு அகற்றும் பணியால் பரபரப்பு நிலவுவதால் 50 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஆய்வாளர் ஜனார்த்தனன், பயிற்சி உதவி ஆய்வாளர் த.பிரகாஷ் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆக்கிரமிப்புகளைத் தாங்க ளாகவே மு ன்வந்து அகற்றிக் கொள்ள வேண்டும் என வர்த்தகச் சங்க வேண்டு கோளை ஏற்றுப் பலரும் முன்னதாகவே ஆக்கிர மிப்புகளை அகற்றிக் கொ ண்டது குறிப்பிட த்தக்கது.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top