பேராவூரணியை அடுத்த ஆத்தாளூரில் உள்ள வீரமாகாளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஆலோசனைக் கூட்டம்.

Unknown
0
பேராவூரணியை அடுத்த ஆத்தாளூரில் உள்ள வீரமாகாளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்து வட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்குப் பேராவூரணி வட்டாட்சியர் ரகுராமன் தலைமை வகித்தார். கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்ட இக்கோயிலில் 25 ஆண்டுகள் கழித்து, வரும் ஜூலை 4 - 14 ஆம் தேதி வரை திருவிழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. திருவிழாவையொட்டிக் குடிநீர் வசதி, மின்சார வசதி, மருத்துவ வசதி, காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகள், கிராமத்தினர் ஒத்துழைப்பு குறித்துக் கூட்டத்தில் ஆலோசித்து முடிவெடுக்கப்பட்டது.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top