தஞ்சைக்கு கொச்சியில் இருந்து சரக்குரெயிலில் 1,300 டன் உரம் வந்தது.

Unknown
0
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு காவிரி ஆற்றில் போதிய அளவு தண்ணீர் வராததால் குறுவை, சம்பா, தாளடி நெற்பயிர்கள் கருகின. ஆழ்துளை கிணறு மூலம் மட்டும் நெல் சாகுபடி நடைபெற்றது.

இந்த ஆண்டும் மேட்டூர் அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் தற்போது தஞ்சை மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றை நம்பியே குறுவை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும் உளுந்து போன்ற பயறு வகை பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இதற்கு தேவையான உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தனியார் உர விற்பனை நிலையங்கள் மூலம் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

இதற்காக வெளிமாநிலத்தில் இருந்து உரம் வரவழைக்கப்படுவது வழக்கம். இந்தநிலையில் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து சரக்குரெயிலில் 20 வேகன்களில் 1,300 டன் காம்ப்ளக்ஸ் உரம் தஞ்சை ரெயில் நிலையத்திற்கு நேற்று கொண்டு வரப்பட்டது. இந்த உர மூட்டைகள் தஞ்சை ரெயில் நிலையத்தில் இருந்து லாரிகளில் தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டன.
Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top