பேராவூரணி அடுத்த கொன்றைக்காட்டில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை ஆய்வு கூட்டம்.

Unknown
0
பேராவூரணி அருகே உள்ள கொன்றைக்காடு அரசு உயர்நிலைப்பள்ளியில் வட்டார சுகாதாரத்துறை சார்பில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை ஆய்வு கூட்டம், விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. தலைமையாசிரியர் மகேஸ்வரி தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் சவுந்தர்ராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் குமாரவடிவேல் முன்னிலை வகித்தனர்.

பேராவூரணி எம்எல்ஏ கோவிந்தராசு பேசுகையில், சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்து கொள்வதாலும் மாணவர்கள் கழிவறையை பயன்படுத்துவதன் மூலமும் காய்ச்சல் வராமல் தடுக்கலாம். தண்ணீரை காய்ச்சி பருகுவதோடு சுகாதாரத்துறையினர் நோய் தடுப்பு நடவடிக்கை பற்றி கூறுவதை பெற்றோர்களிடம் எடுத்துக்கூற வேண்டும் என்றார்.

இதைதொடர்ந்து மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி, கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பள்ளியில் நிறைவடைந்தது. டாக்டர்கள் இலக்கியா, கோகிலா, தீபா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சந்திரசேகர், மருத்துமில்லா மேற்பார்வையாளர் கண்ணன், சுகாதார ஆய்வாளர்கள் பிரதாப்சிங், அமுதவாணன், தவமணி பங்கேற்றனர்.

நன்றி:தினகரன்
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top