பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு டிஜிட்டல் எக்ஸ்ரே வழங்கல்.

Unknown
0
பேராவூரணி அரசு மருத்துவமனை மற்றும் அழகியநாயகிபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ரூ. 17 லட்சத்திலான டிஜிட்டல் எக்ஸ்ரே கருவிகளை பேராவூரணி எம்எல்ஏ மா. கோவிந்தராசு செவ்வாய்க்கிழமை வழங்கினார். பேராவூரணி அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்ட எக்ஸ்ரே கருவி பழுதடைந்த நிலையில் இருந்தது. இதனால் நோயாளிகளுக்கு எக்ஸ்ரே எடுக்கும் நிலை ஏற்பட்டால் பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், புதுக்கோட்டைக்கு அனுப்பி வைக்கும் நிலை இருந்தது. இதுகுறித்து பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் பேராவூரணி பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.17 லட்சம் ஒதுக்கப்பட்டு பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு ரூ. 11 லட்சத்தில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய டிஜிட்டல் எக்ஸ்ரே கருவியும் அழகியநாயகிபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ரூ. 6 லட்சம் மதிப்பிலான எக்ஸ்ரே கருவியும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தலைமை மருத்துவர் (பொ) ஜஸ்டின்பிரசாந்த் கூட்டுறவுச் சங்க நிர்வாகிகள் எஸ்.எம். நீலகண்டன், கே.பி. சேகர், சுரேஷ், கணேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top