பேராவூரணி அரசு போக்குவரத்து கழக பணிமனையிலிருந்து இயக்கப்படும் பேருந்துகள் சரிவர இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதி.

Unknown
0
பேராவூரணியில் இருந்து கிராம பகுதிகளுக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகள் அடிக்கடிநிறுத்தப்படுவதால் மாணவர்கள், பொதுமக்கள் அவதிப்படுவதாக புகார் தெரிவித்தனர்.
பேராவூரணி அரசு பஸ் டெப்போவில் இருந்து சுற்றுவட்டார கிராமங்களுக்கு பஸ்கள்இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்பொழுது வசூலை காரணம் காட்டி சில பகுதிகளுக்குபஸ் இயக்கம் நிறுத்தப்படுவதாகவும், அரசு சேவையில் இருந்து வணிக நோக்கோடுபோக்குவரத்து துறை செயல்படுவதாகவும் புகார் தெரிவிக்கின்றனர். அரசுக்கு நஷ்டம்ஏற்பட்டாலும் பல துறைகள் பொதுமக்கள் அடையும் நன்மை கருதி லாப நோக்கமின்றிசெயல்பட்டு வருவது மரபு, ஆனால் அரசுத்துறை நிறுவனமான போக்குவரத்துதுறை லாபம்இல்லை எனில் பஸ் இயக்கம் இல்லை என முடிவு செய்து செயல்படுகிறது என கேள்விஎழுப்பப்படுகிறது. குறிப்பாக சித்தாதிக்காடு, பின்னவாசல் வழியான ரெட்டவயல் செல்லும்பேருந்து கடந்த ஒருவார காலமாக இயக்கப்படவில்லை, இதை நம்பி ,பள்ளி,அலுவலகங்களுக்கு வரும் பெண்கள் மாணவர்கள், மருத்துவமனைக்கு வந்து செல்லும்நோயாளிகள் என யாவரும் மிகுந்த மன கஷ்டத்திற்கு ஆளாவதோடு வேறுவழி இன்றி பஸ்வரும் என்ற நம்பிக்கையில் பஸ் நிலையத்தில் காத்திருக்க வேண்டி இருக்கிறது. இதனால்ஆத்திரமடைந்த மாணவர்கள் பஸ் நிலையம் முன் தர்ணாவில் ஈடுபட்டதன் காரணமாகபோக்குவரத்து பாதிக்கப்பட்டதை அறிந்து அங்கு வந்த போலீஸ் பயிற்சி உதவிஆய்வாளர்பிரகாஷ், தனிப்படை ஏட்டு பெத்தபெருமாள் ஆகியோர் மாணவர்களை சமாதானப்படுத்திஅனுப்பி வைத்தனர்.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top