பேராவூரணி கடைவீதியில் தீ விபத்தில் அடுப்பு கரிக்கடை எரிந்து நாசம்.

Unknown
0
பேராவூரணி கடைவீதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ரூ 3 லட்சம் மதிப்பிலான அடுப்பு கரி எரிந்து சாம்பலானது.பேராவூரணி பள்ளிவாசல் அருகில் ஆனந்தவள்ளி வாய்க்கால் தென்கரையில் டீக்கடை, ஓட்டல்மற்றும் இரும்பு பட்டறைகளுக்கு பயன்படும் அடுப்புக்கரி விற்பனை செய்யும் கடை உள்ளது. பேராவூரணி நீலகண்டபுரம் பகுதியை சேர்ந்த அப்துல் சத்தார் என்பவர் மகன் அப்துல் ஜபார் ( 60) பல ஆண்டுகளாக இங்கு கடைநடத்தி வருகிறார். இந்நிலையில் வியாழனன்று இரவு கடையை மூடிவிட்டு அப்துல்ஜபார் வீட்டிற்குச் சென்றுவிட்டார். வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் அடுப்புக்கரி கடையில் திடீரென புகை மூட்டத்துடன் தீப்பற்றி எரிவதைக் கண்டஇவ்வழியே சென்ற தொழிலாளி தீயணைப்பு நிலையத்திற்கும், அப்துல் ஜபாருக்கும் தகவல் தெரிவித்தார்.

மேலும் தகவல் அறிந்துஅதிகாலை 3 மணிக்கெல் லாம் சம்பவ இடத்திற்கு வந்த பேராவூரணி பேரூராட்சி முன்னாள் பெருந்தலைவர் என்.அசோக் குமார், பொக்லைன் இயந்திரத்தை வரவழைத்து பொதுமக்களுடன் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டார். பேராவூரணி தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி அலுவலர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் தீ பரவாமல் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.இத்தீவிபத்தில் கடையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள 350 அடுப்புக்கரி மூட்டைகள் தீயில் எரிந்து சாம்பலானது. இச்சம்பவம் குறித்துபேராவூரணி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 நன்றி:தீக்கதிர்
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top