பேராவூரணி அருகே உள்ளது செருவாவிடுதி இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி.

Unknown
1 minute read
0
பேராவூரணி ஊராட்சி ஒன்றியம்,திருச்சிற்றம்பலம் அருகே உள்ளது செருவாவிடுதி தெற்குஊராட்சி. செருவாவிடுதி கடைவீதியில் இருந்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லும் மெயின் சாலையின் தெற்கு பகுதியில், அரசு தொடக்கப்பள்ளி செயல் பட்டு வருகிறது. இதன் அருகாமையில், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்கட்டப்பட்ட ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒருமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. இதிலிருந்து, செருவாவிடுதி தெற்கு ஊராட்சியின் பல்வேறு குடியிருப்புப் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மேல்பகுதி, உள்பகுதியின் சுற்றுச்சுவர் மற்றும்தரையில் இருந்து அமைக்கப்பட்டுள்ள தூண்கள் ஆகியவற்றில் ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. தொடக்கப் பள்ளியின் அருகாமையில் அமைந்துள்ள இந்த மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டி எந்த நேரத்திலும்இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கஉத்தரவிட வேண்டுமென செருவாவிடுதி பகுதி பொதுமக்கள் தஞ்சை மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

நன்றி:தீக்கதிர்
Tags

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top