பேராவூரணியை அடுத்த குருவிக்கரம்பையில் தடகளப் போட்டிகள்.

Unknown
0


பேராவூரணியை அடுத்த குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில், பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அளவிலான,50 ஆவது குடியரசு தின தடகள விளையாட்டு போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் வீ.மனோகரன் தலைமை வகித்தார். உடற்கல்வி ஆசிரியர் மதியழகன் வரவேற்றார்.பெற்றோர் -ஆசிரியர் கழக நிர்வாகிகள் கி.வைரவன், கு.சின்னப்பா, சு.முத்துவேல் ஆகியோர் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார்.மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வி.ராஜேந்திரன், லயன்ஸ் சங்க நிர்வாகிகள், உடற்கல்வி ஆசிரியர் சிவநேசன் மற்றும் உடற்கல்வி இயக்குநர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். சௌந் தர்யா நன்றி கூறினார்.விழாவில் ஓய்வுபெற்ற உடற்கல்வி ஆசிரியர்கள் ரவிச்சந்திரன், ராஜேந்திரன், விஜயகுமார் ஆகியோருக்கு கணையாழி அணிவித்து பாராட்டப்பட்டனர்.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top