பேராவூரணி அரசு கலை அறிவியல் கல்லூரியில் இளநிலை வணிக மேலாண்மை (பிபிஏ) பாடப்பிரிவு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

Unknown
0

பேராவூரணி அரசு கலை அறிவியல் கல்லூரியில், இளநிலை வணிக மேலாண்மை (பிபிஏ) பாடப்பிரிவு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.இதுகுறித்து கல்லூரி முதல்வர் (பொ) சி.இராணி கூறுகையில், “அரசின் அறிவிப்பின்படி உயர்கல்வித்துறை மற்றும் பல்கலைக்கழக மானியக்குழு அனுமதியுடன் நடப்புஆண்டு, பேராவூரணி அரசு கலை அறிவியல் கல்லூரியில் பிபிஏ வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை விண்ணப்பம் கடந்த ஆக.23 ஆம் தேதிதொடங்கியது. இது ஆக.30 ஆம் தேதி வரை வழங்கப்படும். மாணவர் சேர்க்கை கலந்தாய்வு செப்டம்பர் 4 ஆம் தேதி திங்கட்கிழமை நடைபெறும்.அரசு விதிமுறைகளின்படி மாணவர் சேர்க்கை இட ஒதுக்கீடு அடிப்படையில் நடைபெறும். இப்பகுதியைச் சேர்ந்தஇருபால் மாணவர்கள் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்” என்றார்.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top