கர்நாடகாவில்இருந்து சரக்குரெயிலில் 1,960 டன் யூரியா உரம் தஞ்சை வந்தது.

Unknown
0


தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது.

கடந்த ஆண்டு காவிரி ஆற்றில் போதிய அளவு தண்ணீர் வராததால் குறுவை, சம்பா, தாளடி நெற்பயிர்கள் கருகின. ஆழ்துளை கிணறு மூலம் மட்டும் நெல் சாகுபடி நடைபெற்றது. இந்த ஆண்டும் மேட்டூர் அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் தற்போது தஞ்சை மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றை நம்பியே குறுவை சாகுபடி செய்யப்பட்டது.

தற்போது மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து சம்பா, தாளடி சாகுபடி பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு தேவையான உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தனியார் உர விற்பனை நிலையங்கள் மூலம் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

1,960 டன் உரம்

இதற்காக வெளிமாநிலங்களில் இருந்து உரம் வரவழைக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து சரக்குரெயிலில் 31 வேகன்களில் 1,960 டன் யூரியா உரம் நேற்று தஞ்சை ரெயில் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டது. இந்த உர மூட்டைகள் தஞ்சை ரெயில் நிலையத்தில் இருந்து லாரிகளில் தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.
Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top