
பேராவூரணி ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை அறிவியல் மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட தொடக்க விழா.
February 24, 2018
0
பேராவூரணி ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை அறிவியல் மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலகு 1,2,3 சார்பாக தொடக்க விழா ஏனாதிகரம்பை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் க.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். கல்லூரி அறிவியல் ஆலோசகர் ராமையன், கல்வியியல் கல்லூரி முதல்வர் சோலாச்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பேரா கி.புவனேசுவரி வரவேற்றார். பேராசிரியர் ஜி.கீதா அறிக்கை வாசித்தார்.நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பேரா ஏ.பழனிவேலு நன்றி கூறினார். தொடர்ந்து பள்ளி மற்றும் கிராமப் பகுதிகளில் தூய்மைப்பணி மற்றும் சாலைகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் ஈடுபட்டனர்.

Tags
Share to other apps