பேராவூரணி பேருந்து நிலையத்தில் இருந்து நாட்டாணிக்கோட்டை செல்லும் வழியில் ரயில்வே தண்டவாளத்தை ஒட்டியுள்ள சாலை சீரமைப்பு.

Unknown
0
பேராவூரணி பேருந்து நிலையத்தில் இருந்து நாட்டாணிக்கோட்டை செல்லும் வழியில் ரயில்வே தண்டவாளத்தை ஒட்டியுள்ள சாலை சீரமைக்கப்பட்டு வருகிறது. பேராவூரணி பேருந்து நிலையத்தில் இருந்து நாட்டாணிக்கோட்டை செல்லும் சாலையில் ரயில்வே இருப்புப்பாதை அமைந்துள்ளது. தற்போது காரைக்குடி- திருவாரூர் அகல ரயில்பாதைப் பணிகள் நடைபெற்று வருவதால், சாலையை இருபக்கமும் உயர்த்தி, நடுவில் தண்டவாளம் அமைக்கும் பணிநடைபெற்று வருகிறது. இதற்காக மூன்றுமாதங்களுக்கும் மேலாக சாலையை பெயர்த்து, கருங்கல் ஜல்லிகளைக் கொட்டி, சாலையில் பரப்பி வைத்துள்ளனர். ஆனால், தார் ஊற்றி சாலை சீர்செய்யப்படவில்லை.

மேடும், பள்ளமுமாக உள்ள இந்தச் சாலையில் இருசக்கர வாகனங்கள் செல்லமுடியாத நிலை உள்ளது. மணல் கொட்டிக் கிடப்பதால் வாகனங்கள் செல்லும்போது புழுதி மண் கிளம்புகிறது. இதனால் அருகில் குடியிருப்போர், பாதசாரிகள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.எனவே இந்தச் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர்செயலாளர் கொன்றை வே.ரெங்கசாமி கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் சனிக்கிழமை காலைசாலையைச் சீரமைக்கும் பணி தொடங்கியது. சம்பந்தப்பட்ட துறை பொறியாளர்கள் மேற்பார்வையில் தார் ஊற்றி சாலையைச் சீரமைத்து வருகின்றனர்.


நன்றி:தீக்கதிர்
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top