
பேராவூரணி அடுத்த பெருமகளூர் தமிழக அரசின் சிறப்புத்திட்ட முகாம்.
February 17, 2018
0
பேராவூரணி அடுத்த பெருமகளூர் வடபாதியில் தமிழக அரசின் சிறப்புத்திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.பேராவூரணி வட்டாட்சியர் எல்.பாஸ்கரன் தலைமைவகித்தார். வட்ட வழங்கல் அலுவலர் சாந்தகுமார் முன்னிலை வகித்தார். மண்டல துணை வட்டாட்சியர் செல்வகுமார், தலைமைநில அளவையர் செல்வராஜ், வருவாய் ஆய்வாளர் பாண்டியராஜன், கிராம நிர்வாக அலுவலர் பாஸ்கர்மற்றும் வருவாய்த்துறையினர் கலந்து கொண்டனர்.இம்முகாமில் கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் வட்டாட்சியரிடம் அளித்தனர்.

Tags
Share to other apps