
பேராவூரணி அடுத்த செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ முகாம்.
February 24, 2018
0
பேராவூரணி அடுத்த செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள், பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அளவிலான நடுநிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கான கலந்தாலோசனை கூட்டம் மற்றும் ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்றது.முகாமிற்கு தஞ்சை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் ஜி.ரங்கநாதன் தலைமைவகித்தார். மருத்துவ முகாமை பேராவூரணி வட்டாட்சியர் எல்.பாஸ்கரன் தொடங்கி வைத்தார். திருச்சி கியூமெட் மல்டி ஸ்பெஷாலிடி மருத்துவமனை டாக்டர் கோகுல் தலைமையிலான மருத்துவக்குழுவினர் முகாமில் பங்கேற்றவர்களுக்கு பரிசோதனைகளை செய்து மருத்துவ ஆலோசனை மற் றும் மருந்து, மாத்திரைகள் வழங்கினர்.

Tags
Share to other apps