பேராவூரணி அடுத்த சேதுபாவாசத்திரத்தில் விசைப்படகுகள் மராமத்து பணிகள் தீவிரம்.

Unknown
0
பேராவூரணி அடுத்த சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் கடலோ ரப் பகுதிகளில் விசைப்ப டகுகளை மராமத்து செய்வ தில் மீனவர்கள் தீவிரம் காட்டிவருகின்றனர்.கடந்த ஏப்ரல் மாதம்15 ஆம் தேதி மீன்பிடித் தடைக்காலம் தொடங்கி யது. இதுவரை 45 தின ங்களாக இருந்த மீன்பிடித் தடைக்காலம் தற்போது, ஏப்.15 முதல் முதல் ஜூன் 15 ஆம் தேதி வரை, 61 நாட்களாக அதிகரிக்கப்ப ட்டுள்ளது. இந்த காலக ட்டத்தில் மீனவர்கள் தங்கள் படகுகளை மராமத்து செய்வதும், வலைகளை சீரமைப்பதும் வழக்கம். தஞ்சாவூர் மாவட்டத்தில் மல்லிப்பட்டினம், சேது பாவாசத்திரம், கள்ளிவயல் தோட்டம் பகுதியில் 300 க்கும் மேற்பட்ட விசைப்பட குகள் உள்ளன. மீன்பிடித் தடைக்காலமான தற்சமயம் விசைப்படகுகளை மரா மத்து செய்யும் பணியில் மீனவர்கள் தீவிரமாக உள்ள னர். மேலும் மீனவர்கள் தங்கள் வலைகளை சீர்செய்யும் பணியிலும் ஈடு பட்டுள்ளனர். மீன்பிடித் தடை க்காலமாக உள்ளதால் துணைத் தொழில்களான ஐஸ்கட்டி தயாரிப்பு, தலை ச்சுமை வியாபாரிகள், தேநீர் கடைகள், உண வகங்கள் என சிறு வியா பாரிகள் பெருமளவில் பாதி க்கப்பட்டுள்ளனர்.



நன்றி:தீக்கதிர்
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top