பேராவூரணி அரசுக் கலை கல்லூரியில் மாணவர் சேர்க்கை விண்ணப்பம் வழங்கல்.

Unknown
0
பேராவூரணி அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் செவ்வாய்க்கிழமை முதல் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் (பொ) இராணி கூறியது:  இக்கல்லூரியில் இளங்கலை தமிழ் (பி.ஏ.தமிழ்), இளங்கலை ஆங்கிலம் (பி.ஏ.இங்கிலீஷ்), இளநிலை வணிகவியல் (பி.காம்), இளம் அறிவியல் கணிதம் (பி.எஸ்சி மேத்ஸ்), இளம் அறிவியல் கணினி அறிவியல் ( பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ்), இளநிலை வணிக நிர்வாகம் (பிபிஏ) உள்ளிட்ட 6 பாடப் பிரிவுகளுக்கு, இருபால் மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.
மாணவர் சேர்க்கை விண்ணப்பம் மே 15-ந்தேதி முதல் வழங்கப்படுகிறது. விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி மே 30 ஆகும்.  பிற்படுத்தப்பட்ட,  மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ 48, பதிவுக்கட்டணம் ரூ 2 என மொத்தம் ரூ. 50 செலுத்த வேண்டும். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர், சாதிச்சான்று நகலை கொடுத்தால்  பதிவுக்கட்டணம்  ரூ 2 மட்டும் செலுத்தினால் போதுமானது என தெரிவித்தார்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top