இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணம் நாளை.

0
இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணம்  நாளை விண்ணில் தென்பட உள்ளது. 

நிலவு, புவி, சூரியன் ஆகியவை நேர்க்கோட்டில் வரும் போது, சூரிய ஒளியை நிலவுக்குச் செல்லாமல் புவி மறைத்துக் கொள்கிறது. அப்போது நிலவின் வெளிச்சம் குன்றி, சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். புவியின் சுழற்சி காரணமாக ஓரிரு மணி நேரங்கள் தென்படும் இந்நிகழ்வு சந்திர கிரகணம் ஆகும். 

நடப்பாண்டின் ஜனவரி 31ல் முழு சந்திர கிரகணம் ஏற்பட்டது. இதையடுத்து நாளை ஏற்படவுள்ளது. இது நடப்பு நூற்றாண்டின் மிகப்பெரிய கிரகணமாக, 1 மணி 43 நிமிடங்கள் நீடிக்கும் என்று கூறப்படுகிறது. ரத்த சிவப்பு நிறத்தில் தோன்றும் இந்த கிரகணம், கெய்ரோவில் இரவு 9.30 மணிக்கு தென்படும். 

மாஸ்கோவில் இரவு 10.30 மணிக்கும், டெல்லியில் இரவு 10.44 மணிக்கும் தெரியும் என்று வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனை இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா, மத்திய ஆப்பிரிக்காவின் சில நாடுகளில் காணலாம்.


இந்தியாவில் நாளை இரவு 10.44 மணிக்கு தொடங்கி நள்ளிரவைத் தாண்டி நீடிக்கும். ஒரு மணியளவில் முழு சந்திர கிரகணம் தெரியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கிரகணத்தின் போது செய்யக் கூடாது? 

கிரகணம் தொடங்குவதற்கு 2 மணி நேரம் முன்பு, எந்தவித உணவு சாப்பிடக் கூடாது. கர்ப்பிணிப் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது. ஆலயங்கள் மூடியிருக்க வேண்டும். மேலும் ஆலயத் தரிசனமும் கூடாது. 

கிரகணத்தின் போது செய்ய வேண்டியவை? 

செய்து வைத்த உணவுகளில் தர்ப்பை புல்லை போட்டு வைக்கவும். நவகிரக துதி பாராயணம், சந்திர கிரகண துதி பாராயணம் செய்யலாம். 

கிரகணம் முடிந்ததும் செய்ய வேண்டியவை? 

ஆலய தரிசனம் செய்யலாம். தீபம் ஏற்றி வழிபடலாம். பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது நல்லது. தரிசனத்திற்கு பிறகே உணவு உட்கொள்ள வேண்டும். 

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top