தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கலைக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை ஜூன் 3 ஆம் தேதி தொடங்குகிறது.

IT TEAM
0

தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கலைக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை ஜூன் 3 ஆம் தேதி தொடங்குகிறது. அன்று காலை 9 மணிக்கு அனைத்து பாடப்பிரிவுகளிலும், முன்னாள் படைவீரர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விளையாட்டு வீரர் சிறப்பு ஒதுக்கீட்டிற்கான சேர்க்கையும், அதனைத் தொடர்ந்து பி.லிட் தமிழ் இலக்கியம், பி.ஏ., ஆங்கில இலக்கியம் பாடப்பிரிவுகளுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் பாட மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெற உள்ளது. 4-ஆம் தேதி பி.எஸ்.சி., அனைத்து பாட பிரிவுகளுக்கும் 400 முதல் 250 வரையிலான மதிப்பெண் அடிப்படையிலும், 6-ஆம் தேதி பி.எஸ்.சி., அனைத்து பாட பிரிவுகளுக்கும் 250-க்கும் கீழ் உள்ள மதிப்பெண் அடிப்படையிலும், 7-ஆம் தேதி பி.ஏ., பொருளியல், பி.காம்., பி.பி.ஏ., ஆகிய பாடப்பிரிவுகளுக்கு 400 முதல் 250 வரை மதிப்பெண் அடிப்படையிலும், 8-ஆம் தேதி பி.ஏ., பொருளியல், பி.காம்., பி.பி.ஏ., ஆகிய பாடப்பிரிவுகளில் 250 க்கும் கீழ் உள்ள மதிப்பெண் அடிப்படையிலும் கலந்தாய்வு நடைபெற உள்ளதாக கல்லூரி முதல்வர் வெ.செந்தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார்.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top