தஞ்சையில் நாளை(01.11.2019) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்.

IT TEAM
0

தஞ்சையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது.

தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், நாளை 01-11-2019 மற்றும் 08-11-2019, 15-11-2019, 22-11-2019, 29-11-2019 ஆகிய தேதியில் வெள்ளிக்கிழமைகளில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் தனியார் துறை நிறுவனங்கள் மூலம் பல்வேறு பணியிடங்களுக்கு வேலை வழங்கப்பட உள்ளன. இந்த முகாமில் 10, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, டிப்ளமோ இன் யோகா, மற்றும் இளநிலை பட்டம், ஓட்டுநர், தீ பாதுகாப்பு ஆகிய கல்வி தகுதிகளில் படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். (வயது வரம்பு 18 முதல் 35-க்குள்)

இதில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள் (டி.சி, மதிப்பெண் பட்டியல், குடும்ப அட்டை, ஆதார் கார்டு) மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் கலந்து கொள்ள வேண்டும்.

இந்த தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெற விரும்பும் இளைஞர்கள் இதனை தவறவிடாமல் முகாம் நடைபெறும் அன்று காலை 10 மணிக்கு தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆஜராகி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். இதற்கான பயணப்படி எதுவும் வழங்கப்பட மாட்டாது. இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top