பேராவூரணியில் 2 வது நாளாக வங்கிகளில் கால்கடுக்க காத்துக்கிடக்கும் மக்கள் .

Unknown
0

கடந்த 8ந்தேதி இரவு முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு வெளியிட்டார். இதனால் நாடு முழுவதும் உள்ள ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். மேலும், 50 ரூபாய், 100 ரூபாய் நோட்டுகளுக்கு திடீரென பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இதனால் அன்றாட வாழ்க்கை நடத்தவே மக்கள் பெரிதும் கஷ்டப்பட்டனர். நேற்றும், இன்றும் ஏடிஎம் இயந்திரங்கள் வேலை செய்யாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், இன்று முதல் நாடு முழுவதும் உள்ள வங்கிகள், அஞ்சலக மையங்களில் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் மக்களுக்கு, பழைய நோட்டுகளுக்கு பதிலாக வழங்கப்பட்டு வருகிறது.

பேராவூரணி  மக்கள் வங்கிகளுக்கு சென்றே புதிய நோட்டுகளை வாங்கி வருகிறார்கள். இதன் காரணமாக நேற்று பேராவூரணி
வங்கிகள் மற்றும் அஞ்சலக மையங்கள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றது. இந்நிலையில் நேற்றை காட்டிலும் இன்று கூட்டம் சற்று அதிகமாகவே காணப்படுகிறது.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top