பேராவூரணியில் மாரத்தான் ஓட்டம்.

Unknown
0 minute read
0

பேரை ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் நடைபெற்ற, ஒருவார கால கோடைக் கால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு விழா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு திடலில் சனிக்கிழமையன்று நடைபெற்றது.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் என்.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் வீ.மனோகரன், அகஸ்ட் சீயோன் பள்ளி தாளாளர் தளபதி ஆகியோர் சிறப்பு ரையா ற்றினர்.பின்னர் விளையாட்டு பயிற்சி பெற்ற 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்ற, 5 கிலோமீட்டர் தூர விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. பின்னர் போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பேரை ஸ்போர்ட்ஸ் அகாடமி ஒருங்கிணை ப்பாளர்கள் செய்திருந்தனர்.
Tags

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top