பேராவூரணியில் வேர்ட்ஸ்வொர்த் புத்தகக் கண்காட்சி இன்று நிறைவு.

Unknown
0
பேராவூரணியில் தஞ்சை வேர்ட்ஸ் வொர்த் புத்தக நிலையம் சார்பில் புத்தக கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது.
விழாவிற்கு பெரியார் அறக்கட்டளை உறுப்பினர் வை. சிதம்பரம் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்டக்குழு உறுப்பினர் மல்லிகை முத்துராமலிங்கம் கண்காட்சியை திறந்து வைத்தார்.
முன்னாள் பேரூராட்சித் தலைவர் என். அசோக்குமார் முதல் விற்பனையை தொடக்கி வைத்தார். கவிஞர் நந்தலாலாவின் காலத்தை வென்ற காவியத் தலைவர் காமராஜர் குறுந்தகடை வெங்கடேஸ்வரா கலை கல்லூரி முன்னாள் செயலாளர் க. அன்பழகன் வெளியிட்டார்.
தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ம. ராஜேந்திரன் சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற ஆசிரியர் சி. வேலு, அரு. நல்லதம்பி, எச். சம்சுதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top