
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை அல்லது மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும், உள் மாவட்டங்களின் பல இடங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.